மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆணின் தலை : காணாமல் போனவர் காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக!!

474

 
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த சடலம் நேற்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 80 வயதான ஆர்.எம்.ரம்பன்டா என்பவரின் சடலம் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 7ம் மாதம் வெளியில் செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்களால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு நேற்று குறித்த காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற ஒருவர் கயிறில் தொங்கியவாறு எலும்புக்கூடை கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து விரைந்து சென்ற அக்கரப்பத்தனை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டுள்ளார என்பது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.