வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

632

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் இரண்டாவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் வவுனியா, யாழ்ப்பாண கிளைகளில் எதிர்வரும் சனிக்கிழமை 24.02.2018 அன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

உயிர் காக்கும் உன்னத பணியில் இணையுமாறு அனைவரையும் ஏற்பாட்டு குழு அன்புடன் அழைக்கின்றனர்.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்

காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

இரத்ததானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் (Heart attack) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.