வவுனியாவில் சீனிப்பாணியை தேன் என்று வியாபாரம் மேற்கொண்ட இருவருக்கு நேர்ந்த கதி!!

710

வவுனியா நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் சீனிப்பாணியை காய்ச்சி பல இடங்களுக்குச் சென்று தேன் என்று தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றி வியாபாரம் மேற்கொண்ட இருவர் நேற்று ஓமந்தை பனிக்கநீராவி பகுதியில் சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் சுகாதாரப்பரிசோதகர் தெரியவருகையில்,

நேற்றைய தினம் பனிக்கநீராவிப்பகுதியில் தேன் வியாபாரம் மேற்கொண்ட இருவரை சந்தேகத்தில் தேனை பரிசோதனை மேற்கொண்டபோது அது சீனிப்பாணி என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களை விசாரணைக்குட்படுத்தியபோது நெளுக்குளம், ஊர்மிலாகோட்டம் பகுதியிலிருந்து எடுத்து வந்து பல இடங்களில் இவ்வாறு விற்பனை செய்து வருவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் கைப்பற்றப்பட்ட 27 போத்தல் தேனுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கை மேற்கொண்டபோது அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரப்பரிசோதகர் கே.சிவரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.