வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161வது பிறந்ததினம்!!

812

 
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை றொபர்ட் பேடன் பவல் பிரபுவின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 22.02.2018 மதியம் 2 மணிக்கு பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன் தலை மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் திரு.மதிவண்ணன், பிரதி அதிபர் திரு.ரொஷான், சாரண தலைவர் தற்பரன் ஆசிரியர் (வ/விபுலாநந்தாக் கல்லூரி) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.