யாழ். புத்தூர் கிழக்குப் பகுதியில் தனது தாயின் பணத்தை திருடிய மகனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நபரை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் ஏ. யூட்சன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் தாய் இல்லாத நேரம் வீட்டுக்குள் நுழைந்து அவரின் 90 ஆயிரம் ரூபா பணத்தினை திருடியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த நபரின் தாயார் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






