இத்தாலியில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் லெம்பார் மாகாணசபைத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த ஒருவர் அந்த நாட்டின் பிரதான கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
நயினாமடு பிரதேசத்தை சேர்ந்த நெரஞ்சன் வாஸ் என்ற இந்த இலங்கையர் இத்தாலியில் குடியுரிமை பெற்று மிலான் நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இத்தாலியின் பிரதான அரசியல் கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
இத்தாலியில் உள்ள இலங்கை தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சமயம் சார்ந்த பொதுச் சேவையில் ஈடுபட்டு வரும் நெரஞ்சன் வாஸ் கடந்த 35 ஆண்டுகளாக மிலான நகரில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






