ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த குழந்தை மீண்டும் வந்ததால் அதிர்ந்து போன பெற்றோர்!!

1001

ரஷ்யாவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக மருத்துவமனை அதன் பெற்றோரிடம் கூறிய நிலையில் தற்போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

வோல்கோகிராட் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2011ல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த முதலே அதற்கு உடல்நல கோளாறு இருந்த நிலையில் ஒருவாரம் தான் உயிருடன் இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து உயிரிழக்க போகும் குழந்தையை வீட்டுக்கு எடுத்த செல்ல மனமில்லாத பெற்றோர் மருத்துவமனையிலேயே குழந்தை இருக்கட்டும் என எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் வீட்டுக்கு சென்ற சில நாட்கள் கழித்து பெற்றோருக்கு குழந்தை ஞாபகம் வந்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களின் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆண்டுகள் உருண்டோடின, இந்நிலையில் கடந்தாண்டு நவம்பரில் அனாதை ஆசிரிமத்திலிருந்து £3000 பணம் கட்ட சொல்லி குழந்தையை இழந்த பெற்றோருக்கு ரசீது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர்கள் கவனிக்காத நிலையில் அவர்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது.

பின்னர் தான் இறந்ததாக நினைத்த தங்கள் குழந்தை அனாதை ஆசிரமத்தில் வளர்வதும், அதற்கான கட்டணம் அந்த பணம் என்பதும் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதை உறுதி செய்த பெற்றோர் ஒரு நிமிடம் நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

எனினும் குறித்த மருத்துவமனை ஏதேனும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.