வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்துவரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓட்டம் நேற்று (24.02) வவுனியாவை வந்தடைந்தது.
கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் நேற்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தது.
ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாலையை ஏந்தியவாறாக 72 நாடுகளுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது நேற்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.
பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இம் மரதன் ஒட்டமானது இலங்கையில் வவுனியா, மாங்குளம், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது.
மாலை 03.00 மணிக்கு வந்தடைந்த இவ் உலகசாதனை வீரனுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வவுனியா இளைஞர்கள் சிலரும் இப்பயணததில் இணைந்திருந்தனர்.
இவர் 69 உலக சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.