கொழும்பில் அதிகளவில் இனம்காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகள்!!

289

இலங்கையில் தற்போது வரையில் 3843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும் சுமார் 4000 பேர் வரையில் இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பிரதேசங்களிலேயே பெருமளவான எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக 25 – 45 வயதுப்பராயத்தில் உள்ளவர்களையே எயிட்ஸ் நோய் கூடுதலான அளவில் தாக்கியுள்ளது.

இவர்கள் பாதுகாப்பற்ற பாலுறவுகள் மூலம் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அறிமுகமற்றவர்களுடனான பாலுறவு செயற்பாடுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாளுவதே எயிட்ஸ் நோயிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான வழி என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.