உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு திடீர் வரி அதிகரிப்பு!!

717

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு திடீர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு இதுவரை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபா மட்டுமே வரி விதிக்கப்பட்டு வந்தது.

எனினும் இன்று நள்ளிரவு முதல் குறித்த வரியை 29 ரூபாவால் அதிகரித்து கிலோ ஒன்றுக்கு 30 ரூபா வரிவிதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உருளைக்கிழங்கு விளைச்சல் தற்போது சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் அது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும்.

இதனைக் கவனத்திற் கொண்டு உள்நாட்டு விவசாயிகளின் விளைச்சலை சந்தைப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.