வவுனியாவில் வியாபாரம் மேற்கொள்வதற்கு உதவிகள் வழங்கிவைப்பு!!

529

 
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தனது மனைவியுடன் தனிமையில் வசித்துவரும் கிருஷ்ணன் குருநாதன் என்பவர் தனக்கு வாழ்வாதரத்தினை மேற்கொள்வதற்கு வியாபாரம் செய்வதற்கு உதவிகள் வழங்கிவைக்குமாறு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரிடம் விடுத்த கோரிக்கையினை அடுத்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் உறவுகளின் உதவியுடன் நேற்று(23.02) காலை வவுனியா பிரதேச செயலகத்திலுள்ள ஆலயத்தின் முன்றலில் வைத்து மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதற்கு துவிச்சக்கரவண்டி, தராசு, மரக்கறியுடன் கூடை என்பன குறித்த வயோதிபருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று மரக்கறி வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு குறித்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் கா. உதயராஜா மரக்கறிகள் வாங்கி வியாபார நடவடிக்கையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.