அம்பலாந்தோட்டை கடற்கரையில் இனம் தெரியாத நிலையில் உருக்குலைந்த சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கடற்கரையில் நேற்றையதினம் கரையொதுங்கியுள்ள குறித்த சடலம் சில தினங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் கடலில் குளிக்கும் போது காணாமல் போன 17 வயது இளைஞனின் சடலமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், சடலத்தின் ஒரு சில உடற்பாகங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், மரபணு பரிசோதனை மூலம் சடலத்தை இனம் காண்பதற்கு வசதியாக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






