வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் காதலியும் இன்று (25.02.2018) காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக் கிணற்றினுள் வீழந்து தற்கொலை செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததன் காரணமாக இப் பெண்ணும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 29 வயதுப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்பான செய்தி..
வவுனியாவில் விடுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!






