தனியார் பேருந்து விபத்து : 37 பேர் படுகாயம்!!

807

வலப்பனை, அபன் எல்ல பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை, நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் தொடர்ந்தும் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.