பிரித்தானியாவில் பிரிந்து சென்ற மனைவி கொடூரமாக கொலை செய்த கணவன்!!

508

பிரித்தானியாவில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற வழக்கில் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Bristol நகரில் வசிக்கும் தம்பதி Adan Dahir- Asiyah Harris. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி மனைவியை சந்திக்க வந்த Adan Dahir சண்டை போட்டுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் அளித்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் Asiyah Harris-யை சடலமாக மீட்டனர்.

கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் Asiyah Harris. இதுகுறித்து பொலிஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், Asiyah Harris தன்னை கொல்லும் நோக்குடன் சண்டையிட்டதாகவும், எதிர்பாராதவிதமாக அவரே தற்கொலை செய்து கொண்டதாகவும் Adan Dahir தெரிவித்துள்ளார்.

ஆனால் இறப்புக்கு, என்னை விட்டு விடு ப்ளீஸ், கத்தியை கீளே போடு, என்னை கொன்று விடாதே, நான் உன்னை காதலிக்கிறேன் என Asiyah கத்தியதை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பான விசாரணை Bristol Crown Courtல் நடந்து வந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.