சிரியா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் : கனடா பிரதமர் வலியுறுத்தல்!!

613

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரியாவில் நடக்கும் போர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்து வரும் போரில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் இதுவரை சுமார் 700 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு, ஆதரவு அளிப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘சிரிய அரசும், ரஷ்ய, ஈராக் படையும் அங்கு இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரிய தவறு. மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்களை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனிதர்கள் செய்ய கூடிய செயலே இல்லை, இந்த மோசமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அங்கு மருத்துவ உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு வசதியாக அங்கு இருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்

கனடாவில் இருக்கும் சிரிய மக்களும், இஸ்லாமிய மக்களும் சிரிய போருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.