காயம் காரணமாக அஞ்சலா மத்யூஸ் விலகல்!!

480

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் காயம் காரணமாக இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் Nidahas கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே காயம் காரணமாக அவதியுற்ற மத்யூஸ்க்கு தற்போது தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் முத்தரப்பு கிரிக்கட் தொடரில் விளையாட முடியாது என இலங்கை அணியின் தரப்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாகத் தான் மத்யூஸ் மீண்டும் இலங்கை அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த தொடரின் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் பின்னர் காயம் காரணமாக வேறு எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் மத்யூஸ் இல்லாத நிலையில் இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் மீண்டும் தலைமை தாங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் Nidahas கிண்ண கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகின்றது.