கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மர்மமாக சுற்றித்திருந்த நபர்கள்!!

568

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுற்றி திரிந்த குற்றச்சாட்டில் 16 பேர் நேற்று கைது செய்யயப்பட்டுள்ளனர்.

காரணமின்றி அந்த பகுதியில் சுற்றத்திரிந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 16 பேருக்கு 24,000 ரூபாய் அபராதம் விதிக்க மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவரிடம் 1500 ரூபாய் என்ற கணக்கிலேயே அபராத தொகை அறவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நபர்கள் பல்வேறு சட்டவிரோதமான செயற்பாடுகள் மேற்கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுற்றித் திரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.