சிறைக்குள் ஒருவர் அடித்துக் கொலை : குற்றவாளிக்கு மரணதண்டனை!!

695

பொலிஸ் தடுப்புக் கூண்டுக்குள் சந்தேக நபர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காலி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காலி உடுகம பிரதேசத்தில் கள்ளச் சாராயம் திருட்டுப் போன சம்பவம் காரணமாக இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரையும் பொலிசார் தலையிட்டு சமாதானப்படுத்தியுள்ளனர்.

எனினும் பொலிஸ் நிலையத்துக்கு எதிரிலேயே இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதன் காரணமாக ,பொலிசார் இருதரப்பில் இருந்தும் ஒவ்வொருவரை கைது செய்து தடுப்புக் கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தடுப்புக் கூண்டுக்குள் அடைபட்ட இருவரும் சண்டையிட்டு ஒருவர் மற்றொருவரை தடியொன்றினால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளிக்கு நேற்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.