3வது மாடியில் இருந்து பெற்ற பிள்ளையை வீசி எறிந்த தாயார் : அதிர்ச்சிக் காரணம்!!

928

சீனாவில் முன்னாள் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரம் கொண்ட பெண் ஒருவர் தமது மகனை 3வது மாடியில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார்

30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். இதனையடுத்து குறித்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருக்கும் ஷாங் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் தமது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில் தங்களது 2 மகன்களையும் யார் கவனித்துக் கொள்வது என்ற விவாதம் இருவருக்கும் இடையே எழுந்துள்ளது.

தொலைபேசி வழியாக நடந்த இந்த விவாதத்தில் இருவரும் காரசாரமாக தங்கள் பக்க கருத்துகளை முன்வைத்துள்ளனர். இதில் 6 வயது மகனை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக தாயாரும், 4 வயது மகனை தந்தையும் வளர்ப்பதாக முடிவானது.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த ஷாங், 4 வயது மகனை விட்டுத்தர முடியாது என வாதிட்டுள்ளார். இந்த நிலையிலேயே தங்கியிருந்த ஹொட்டல் அறையில் இருந்து குறித்த சிறுவனை அவர் தூக்கி வெளியே வீசியுள்ளார்.