மட்டக்களப்பு – களுதாவளைக் கடற்கரையில் சிறிய டொல்பின் மீன் ஒன்று உயிருடன் கரையொதுங்கியுள்ளது.
குறித்த மீன் இன்று காலை வேளையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த டொல்பின் மீனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அந்த மீனை மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.






