மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!!

602

ஹோமாகமை விமான வீதி பகுதியில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

43 வயதான நபரும் அவரது 3 வயதான பெண் பிள்ளையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பெண் பிள்ளை மாற்றுத்திறனாளி என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த போது, பிள்ளையின் தாயும் மூத்த மகளும் வீட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விஷம் அருந்தியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மகளின் உடல்நிலைமை குறித்து தந்தை மனக்கவலையில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.