ஸ்ரீதேவி உடலில் கடைசியாக போர்த்தப்பட்ட காஞ்சிபுரம் புடவை : ஏன் தெரியுமா?

1670

நடிகை ஸ்ரீதேவிக்கு காஞ்சிபுரம் சிவப்பு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் உடலில் அது கடைசியாக உடுத்தப்பட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது. அழகாக மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டு, அவரின் உடலில் சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவை போர்த்தப்பட்டிருந்தது.

ஸ்ரீதேவிக்கு சிவப்பு நிறத்திலான காஞ்சிபுரம் புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் தென் இந்தியாவின் காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட புடவை அவர் மீது போர்த்தப்பட்டுள்ளதாம்.

அத்துடன் வாகனம் முழுதும் வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதேவியின் உறவினரான அர்ஜீன் கபூர் இறுதிச்சடங்குக்கான வேலைகளை முன்னின்று நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.