புறப்பட்ட விமானத்தில் இருந்து கீழே குதித்த 2 பயணிகள் : அதிர்ச்சி சம்பவம்!!

650

ஈக்குவடோர் நாட்டில் இருந்து நியூயோ ர்க் செல்லும் விமானத்தில் புறப்பட்ட சில நொடிகளிலேயே பயணிகள் இருவர் வெளியே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்குவடோர் நாட்டின் க்வாயேகில் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது குறித்த விமானமானது புறப்பட்ட சில நொடிகளில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் ஓடுதளத்தில் விழுந்துள்ளதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

விமானத்தில் இருந்து ஏதோ முக்கிய பொருள் கழண்டு விழுந்ததாக கருதி அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக குறித்த பகுதிக்கு விரைந்து சோதனையிட்டுள்ளனர்.

அப்போது விமானத்தில் இருந்து விழுந்தது 2 நபர்கள் என தெரிய வந்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னொருவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு பெட்டியில் துணியும் 20 டொலர் பணமும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் பெரு நாட்டவர்கள் எனவும், கள்ளத்தனமாக அமெரிக்க செல்ல திட்டமிட்டு விமானத்தின் லாண்டிங் கியர் பகுதியில் மறைந்திருந்ததும் தெரியவந்தது.

இருவரும் தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கியர் பகுதியில் அமைந்துள்ள இந்திரம் அவர்களை வெளியே தள்ளியிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் ஈக்குவடோர் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமானது சுமார் 90 நிமிடங்கள் வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.