எகிப்தின் வடக்கு Cairo பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 16 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதால் இந்த விபத்து நேரிட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு 30 அம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் கழன்று தனியே போய் சரக்கு ரயிலுடன் மோதியதால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும் எகிப்தின் Alexandria நகரில் நிகழ்ந்த இதே போன்ற ஒரு ரயில் விபத்தில் 41 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






