கடந்த 2 மாதங்களில் பேஸ்புக் மோசடிகள் தொடர்பாக 300 முறைப்பாடுகள்!!

561

2018ம் ஆண்டின் கடந்த இரண்டு மாத காலகட்டத்துக்குள் பேஸ்புக் மோசடிகள் தொடர்பாக சுமார் 300 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகளை பெண்களே மேற்கொண்டுள்ளதாகவும், 60 வீதமான முறைப்பாடுகள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை இலங்கையின் சைபர் கிரைம் பாதுகாப்பு அமைப்பின் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகள், அடுத்தவரின் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், மற்றவரின் பேஸ்புக் கணக்குகளில் ஊடுருவுதல், போன்ற செயற்பாடுகள் தொடர்பாகவே மேற்கண்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் 0112691692 இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

கடந்த 2017ம் ஆண்டு பேஸ்புக் மோசடிகளில் பாதிக்கப்பட்ட 3800 பேர் இவ்வாறான முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.