பிரான்சில் உச்சத்தை எட்டியுள்ள இனவெறுப்பு : கறுப்பின பாராளுமனற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!!

667

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான Laetitia Avia என்பவருக்கு அனுப்பப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Laetitia Avia, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் En Marche movement அமைப்பின் உறுப்பினர் ஆவார். இவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு தடித்த கருப்பு பன்றியை பிரான்சு மக்களிடையே வாழ அனுமதிக்க மாட்டோம்” என்றும், ”உன் முகம் பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது, பிரான்சின் பணத்தை வீணாக்குவதற்காகவே இங்கு வாழும் உன் போன்றவர்கள் பேசாமல் ஆப்பிரிக்க மக்களுக்கு சேவை செய்யப் போகலாம்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

இக்கடிதம் குறித்து Laetitia Avia முறைப்படி புகாரளித்துள்ளார். அவருக்கு வந்த இந்த கடிதத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சரான Gérard Collomb “இது ஒரு மோசமான இன வெறுப்புத் தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார். பிரான்சின் பாலின சமத்துவத்துறை அமைச்சரான Marlène Schiappa, இது ஏற்றுக்கொள்ள முடியாத இன வெறுப்பு மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

Laetitia Avia தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோல் Sacha Houlié என்னும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.