மனைவி-குழந்தை முன் புலியிடம் சிக்கி இறந்த கணவன் : காப்பாற்ற போராடிய ஊழியர்கள்!!

661

சீனாவில் மனைவி மற்றும் குழந்தை முன்னே கணவர் ஒருவர் புலியிடம் சிக்கி இறந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Ningbo பகுதியில் Youngor Zoo என்ற பூங்கா உள்ளது. இங்கு Zhang என்ற நபர் தன்னுடைய நண்பர்கள், மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார்.

அப்போது அவர் பூங்காவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிமாக அங்கிருக்கும் சிபிரியன் வகை புலியிடம் சிக்கியுள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய அவர், அந்த புலியிடமிருந்து தப்பிப்பதற்கு போராடினார். இதைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் பட்டாசு வெடித்து புலியை விரட்ட முயற்சித்தனர்.

ஆனால் முதலிலே அவரின் கழுத்தை கடித்துவிட்டதால், உயிருக்க போராடிய அந்த நபர் புலியிடமிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்ததால், அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.