பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை : கடுமையான பனிப்பொழிவால் பரிதவிக்கும் மக்கள்!!

620

பிரித்தானியாவில் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தபடி எம்மா புயலின் காரணமாக பனிப்பொழிவும், கடுங்காற்றும் தொடங்கும் நேரலை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இளவேனிற்காலம் தொடங்கும் நாளாகிய இன்று சாலைகளெங்கும் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் நகர முடியாமல் தவிக்கின்றன, உதவிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

கடும் வேகத்துடன் குளிர்காற்றும், கனத்த பனிப்பொழிவும் ஏற்பட இருப்பதால் மத்திய ஸ்கொ ட்லாந்து, வேல்ஸ் மற்றும் தென் மேற்கு பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கையும் பிற பாகங்களில் Amber அல்லது மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கொ ட்லாந்து பகுதியில் M80 நெடுஞ்சாலையில் நேற்றிரவு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் பனியில் சிக்கியுள்ளன, சில பகுதிகளில் சாலை மூடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக பிரித்தானியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வீதிகளிலும், மரங்களிலும் எட்டு சென்றி மீற்றர் அளவில் பனிபடர்ந்துள்ளது, ஆறுகளில் மெல்லிய அடுக்கும் உருவாகியுள்ளது. பார்ப்பதற்காக அழகாக காட்சியளித்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.