நானுஓயா – ஈஸ்டல் தோட்ட காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை நேற்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல் போயிருந்த நிலையில் மூதாட்டியின் உறவினர்கள் நனுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரதே பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






