வடகொரியாவுக்கு அடுத்து உலகை அச்சுறுத்தும் ரஷ்யா : அமெரிக்காவிற்கு எச்சரிக்கை!!

542

எதிரி நாடுகளால் வெல்ல முடியாத அணுஆயுதம் தாங்கிய ஆயுதங்களை சோதனை செய்து வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

குறித்த ஏவுகணைகள் எதிரிகளின் ரடார் அமைப்புகளில் சிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தொடர் ஏவுகணை சோதனைகளால் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரியா அரசு உலக நாடுகளை போர் பயத்தில் அச்சுறுத்தி வந்தது. ஐ.நா உள்ளிட்ட உலக நாடுகள் பல வடகொரியாவுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது ரஷ்யா உலக நாடுகளால் வெல்லவே முடியாத அணுஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மட்டுமின்றி எதிர்கால ரஷ்ய ராணுவ சக்தி தொடர்பில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி புடின், யுத்தங்களை தூண்டும் வகையில் அமெரிக்கா செயல்படுவதை இனி பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ தொழில்நுட்பத்தால் கண்டறிய முடியாத ஆயுதங்களை ரஷ்யா வடிவமைத்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தங்களது நட்பு நாடுகள் மீது தொடுக்கப்பட்டும் எந்த ஒரு அணுஆயுத தாக்குதலுக்கும் உடனடியாக ரஷ்யா பதில் தாக்குதல் தொடுக்கும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரடியாகவே அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள அதிக நிதி தேவை என பிரித்தானிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள அதே நாள், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன.