வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது : மூவர் தப்பி ஓட்டம்!!

552

வவுனியவில் நேற்று(01.03.2018) இரவு நெளுக்குளம் பொலிசார் புதையல் தோண்டிய மூவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவித்தனர்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சாம்பல்தோட்டம் பகுதியில் புதையில் தோண்டுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நெளுக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.அத்தநாயக்க தலைமையில் சென்ற குழுவினர் சாம்பல்தோட்டம் மைதானப்பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய மூவரைக்கைது செய்துள்ளதுடன் மேலும் அங்கிருந்த மூவர் தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய மூவரையும் பொலிசார் தீவரமாகத் தேடிவருவதாகவும் புதையல் தோண்டுவதற்குப்பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான் என்பனவற்றையும் கைது செய்யப்பட்டவர்கள் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 23, 32 வயதுடைய இருவரும் நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்தனர்.