இந்தோனேசியாவில், காணாமல் போன நபர் ஒருவரின் உடல் பாகங்கள், நதிக்கரையில் பிடிபட்ட முதலையின் வயிற்றில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டின், போர்னியோ பகுதியில் பாமாயில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.
அவரின் இருசக்கர வாகனமும், காலணியும் நதிக்கரையோரம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அவரை தேடிய போது குறித்த நபரின் உடல், கைகள் மற்றும் கால்கள் அற்ற நிலையில் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினரின் உதவியுடன் நதிக்கரைப் பகுதியில் நடமாடிய 20 அடி நீள முதலை ஒன்றை, அதிகாரிகள் சுட்டுப் பிடித்துள்ளனர். அதன் பின்னர், முதலையை பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் வயிற்றுக்குள் மனித கை மற்றும் கால்கள் இருந்துள்ளது.
இந்நிலையில், நதியில் இது போல் மேலும் சில முதலைகள் இருக்கலாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






