நான்கு ஆண்டுகளாக மரப்பெட்டி ஒன்றில் வாழ்ந்து வந்த மூன்று குழந்தைகளை மீட்ட பொலிசார் அவர்களுக்கு சரியான உணவளிக்காமல் கொடுமைப்படுத்திய பெற்றோரைக் கைது செய்தனர்.
அமெரிக்காவில் Joshua Tree பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த 20 அடி நீள மரப்பெட்டி ஒன்றை ஆய்வு செய்த பொலிசார் அதற்குள் மூன்று பிள்ளைகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் நான்கு ஆண்டுகளாக அவர்கள் அந்தப் பெட்டிக்குள் வாழ்ந்து வருவது தெரியவந்தது.
அவர்களுக்கு சரியான உணவளிக்காமல் அந்தப் பெட்டிக்குள் அவர்களை அடைத்துக் கொடுமைப்படுத்திய அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான Mona Kirk(51) மற்றும் Daniel Panico(73)வை பொலிசார் கைது செய்தனர்.
சுமார் 30 முதல் 40 பூனைகள் சுற்றிக்கொண்டிருந்த அந்த பகுதி குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. அங்கு தண்ணீர் வசதியோ மின்சார வசதியோ இல்லை.
11, 13 மற்றும்14 வயதுடைய அந்தப் பிள்ளைகள் விலங்குகளைப்போல அந்த மரப்பெட்டிக்குள் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வெளி உலகத்துக்கு தெரியாமலே இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









