இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு கொலை மிரட்டல்!!

350

akshyஇந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு அவரது செல்போனில் மர்ம அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் தன்னை பிரபல தாதா ரவி பூஜாரி என்று கூறி கொண்டான். உங்களது வீட்டில் பணியாற்றிய வேலைக்காரரை பணி நீக்கம் செய்தது தவறு. இதனால் உங்களை கொலை செய்ய போகிறோம் என்று மிரட்டல் விடுத்தார்.

இதைக்கேட்டு பதறிப்போன அக்ஷய் குமார் உடனடியாக பொலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த பொலீசார், மர்ம நபர் பயன்படுத்திய போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ரவி பூஜாரி பெயரை கூறி யாரோ விஷமிகள் பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. தனது வீட்டு வேலைக்காரர் ஒருவரை நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கினார். அவரது தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.