வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னாள் பாரஊர்தி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.. வவுனியா நீதிமன்றத்திற்கு முன்னால் வீதியில் சென்றுகொண்டிருந்த பாரஊர்தி ஒன்றை முந்திச்செல்ல மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாரஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் காயமடைந்த இரு யுவதிகள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த விபத்தில் சிக்கிய யுவதிகள் இருவரும் அதிஷ்ரவசமாக உயிர் பிழைத்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
–





