வவுனியாவில் சிரிய இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன அமைதிப்பேரணி!!

313

சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது.

சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே இதன் வலியை வெளிப்படுத்த வவுனியாவின் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (03.03.2018) மாபெரும் கண்டன அமைதிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கண்டன அமைதிப்பேரணி வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா பழைய பஸ்நிலையத்தில் முடிவடைய உள்ளது.

எனவே வவுனியாவின் அனைத்து இளைஞர் யுவதிகளையும் ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவின் சுயாதீன இளைஞர்கள்