வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்!!

528

 
வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் செயற்திட்டங்கள், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02.03) புகையிரத வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா பேர்ம் (FIRM) நிறுவனத்தினூடாக தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் செயற்திட்டங்கள் எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமாக அங்கத்தவர்களிடையே தெளிவை ஏற்படுத்தி அடுத்து நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் சமாதான பேரவையின் ஆலோசகர் ஹென்றி டிமெல், தேசிய சமாதான பேரவை செயற்திட்டம் மற்றும் அமுலாக்கத்தின் அதிகாரி எம்.எச்.முஹமட், வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.‌