இலங்கையில் ஓராண்டுக்கு 48000 இயற்கைக் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிபுணத்துவ மருத்துவர் கபில ஜயரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கருச்சிதைவு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடமொன்றுக்கு இலங்கையில் சுமார் 4 லட்சம் கருத்தரித்தல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் மூன்று இலட்சத்து 52 ஆயிரத்து சிசுக்கள் உயிருடன் பிறக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.






