கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
155.23 ரூபாயில் இருந்த டொலர் 157.00 வரை அதிகரித்துள்ளமையினால் வெளிநாட்டு கடன் 84,456 மில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு நிறைவடையும் போது இலங்கையின் கடன் பெறுமதி 46,585.7 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
ரூபாய் வீழ்ச்சியடைந்த நிலையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் எண்ணை விலை அதிகரித்துள்ள நிலையில், ரூபாயின் வீழ்ச்சியான பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.






