வவுனியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் : தடுக்க ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ அமைப்பு உதயம்!!

545

 
வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக 024-324 4444 என்கிற தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

அரசியல், மதசார்பற்ற அமைப்பாக இயங்கும் இவ்வமைப்பானது பல பொது அமைப்புக்களை இணைத்து செயற்பட்டுவருகின்றது.

வவுனியாவில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை இன்று (03.03.2018) 8.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை வவுனியா நகர் முழுவதும் விநியோகித்தனர்.

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐவர் தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.