வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!

434

 
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை இன்று (03.03.2018) காலை 8.30 மணியளவில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் நகரபிதாவும் வட மாகாணசபையின் உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் , பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), கவிஞர் மாணிக்கம் ஜெகன் ,

வவுனியா நகர சபை உறுப்பினர்களான நாகலிங்கம் சேனாதிராஜா , சுந்தரலிங்கம் காண்டீபன் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், தமிழருவி சிவகுமார், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், வர்த்தகர்கள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வுவச் சிலையை அப்போது நகரசபைத் தலைவர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் அக் காலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தர்மலிங்கம் சித்தார்த்தனால் 1997.04.04ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.