வவுனியாவில் சிரிய இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன அமைதிப்பேரணி!!

880

சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது.

சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே இதன் வலியை வெளிப்படுத்தி வவுனியாவின் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று 03.03.2018 மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன அமைதிப்பேரணி இடம்பெற்றது.

இக் கண்டன அமைதிப்பேரணி வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடியில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா பழைய பஸ்நிலையத்தில் முடிவடைந்தது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவே ஆக்கிரமிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்து , அமெரிக்காவே, ரஷ்யாவே சிரியாவை விட்டு உடன் வெளியேறு , அன்று – ஈராக் நேற்று – லிபியா இன்று – சிரியா நாளை – எந்த நாடு? , துருக்கியே குர்திஸ் மக்களைக் கொல்லாதே , போர் வேண்டாம் அமைதி நிலவட்டும் , சிரியாவை பாலைவனம் ஆக்காதே என பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் அமைதிப்பேரணியில் இளைஞர்கள் , யுவதிகள் , சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.