மனைவியில்லாத சமயத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தந்தை : நடந்தது என்ன?

558

அமெரிக்காவில் மனைவி கென்யாவுக்கு சென்றிருந்த நேரத்தில் ஒரு வயது மகளை கொடூரமாக கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலபமா மாகாணத்தை சேர்ந்தவர் ஷா குயுல் (26). இவர் மனைவி அட்ரியன் ஓமண்டி (24). இவர்களுக்கு கேத்தியா (1) மற்றும் ஜிராயா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கென்யாவில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க அட்ரியன் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த தனது மகள் மேத்தியாவை, ஷா கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் ஷா வீட்டுக்கு வந்து அவரை கைது செய்ததுடன் மேத்தியாவின் சடலத்தையும் கைப்பற்றினார்கள்.

ஷா தனது மகளை ஏன் கொலை செய்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.