இலங்கையில் நடக்கவிருக்கும் டி20 முத்தொடரில் லசித் மலிங்க அணியில் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ண டி20 தொடர் எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இலங்கை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் மலிங்க இந்த தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை.
தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் மாலிங்க அணியில் சேர்க்கப்படாமல் உள்ளது இலங்கை ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக டுவிட்டரில் #BringBackMalinga என்ற டேக்கில் மலிங்கவை அணியில் சேர்க்க வலியுறுத்தி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.