தாயின் கண்முன்னே இரு குழந்தைகள் கழுத்து அறுத்துக் கொலை!!

310

knifஇந்தியாவின் கேரளாவில் பெற்ற தாயின் கண் முன்பே இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ராணியை அடுத்த கீழாளூரில் நடந்த இந்த பயங்கர கொலை குறித்த விவரம் வருமாறு..

ஆட்டோ சாரதியாக உள்ளவர் சிபு. இவரது அண்ணன் சைபு. சைபுவின் மனைவி பிந்து இவர்களுக்கு 2 குழந்தைகள். 7 வயது மெல்பின் மற்றும் இரண்டரை வயது மெபின்.

சைபு வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிந்து தனது 2 குழந்தைகளுடன் கணவரின் பெற்றோரான சாக்கோ-மேரிக்குட்டி வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலை சாக்கோவும் மேரிக்குட்டியும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று விட்டனர். வீட்டில் பிந்துவும் அவரது 2 குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிபு பிந்துவிடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிபு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பிந்து கண்களில் தூவினார்.

அதன் பிறகு வீட்டில் இருந்த குழந்தைகள் மெல்பின், மெபின் ஆகிய இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

தன் கண் முன்பு நடந்த இந்த கோர சம்பவத்தை பார்த்து பிந்து கதறி துடித்தார். அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சிபுவை மடக்கிப்பிடித்தனர். பிறகு பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பொலிசார் அங்கு சென்று சிபுவை கைது செய்தனர். பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் ஏற்கனவே விஷம் குடித்து விட்டதாக சிபு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அவரை அங்குள்ள அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எதற்காக பிந்துவின் 2 குழந்தைகளை சிபு கொடூரமாக கொலை செய்தார் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.