வவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!!

649

 
வவுனியாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (05.03.2018) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாயமும் கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் அமைச்சர் கந்தையா சிவனேசன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

வவுனியாவில் 2017 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாய போதனாசிரியர் மட்ட வெற்றியாளர்களான சிறந்த விவசாயிகள், சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர், சிறந்த சேதன விவசாய செய்கையாளர்கள், நவீன விவசாய இயந்திரமயமாக்கலை மேற்கொள்ளும் சிறந்த விவசாயிகள், இளம் விவசாயிகள், பெண் வலுவூட்டலை நிலைப்படுத்துவதற்காக சிறந்த விவசாய பெறுமதி சேர் நடவடிக்கையுடன் வணிகமுறைமையையும் பின் பற்றும் விவசாயப் பெண்கள் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இ.இந்திரராசா, ம.தியாகராஜா, அ.ஜெயதிலக, த.செனவிரெட்ன, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன மற்றும் கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராட்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண்ணையாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.