வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 161 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக நேற்றுமுன்தினம் (03.03.2018) காலை 9 மணியளவில்,
வவுனியா பொதுவைத்தியசாலையில் அமைந்துள்ள பிராந்திய இரத்த மத்தியஸ்தானத்தில் வவுனியா பிறமண்டு வித்தியாலயத்தின் ஜனாதிபதி விருது பெற்ற சாரணன் பி.கெர்சோன் தலைமையில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் அதிதிகளாக சாரண மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கஜேந்திரன், உதவி மாவட்ட ஆணையாளரும் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளருமான சு.காண்டீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரத்ததான நிகழ்வில் பொதுமக்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.