அரசியலை சுத்தம் செய்ய இதுவே சரியான நேரம் : கமல்ஹாசன்!!

299

தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்காக வந்திருந்த மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், மாற்றத்தை கொண்டு வருவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமை, நீங்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும், அதற்கான சூழல் நிச்சயம் உருவாக்கப்படும்.

மாணவர்களை பார்த்து தலைவா என்று நான் கூறும் நிலை வரவேண்டும், யார் வீழ்ந்தாலும் தமிழகம் எழுந்தே தீரும், அதற்கு மாணவர்களின் தொண்டு அவசியம்.

அழகிய குடும்பத்தில் உறுப்பினராக சேர்ந்து இருக்கிறீர்கள், இந்த குடும்பத்தை மேலும் அழகாக்கி இருக்கிறார்கள்.

என் எண்ணம் உங்கள் எண்ணமாக உருவாக வேண்டும், நீங்கள்தான் என் பேச்சு, தமிழகம்தான் என் மூச்சு என பேசியுள்ளார்.