இலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆபத்தான வாகனம்!!

498

இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 4 சக்கர வாகனம் ஒன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை இலங்கை சுய வேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிக்கு சமமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம் இந்திய தயாரிப்புகளில் ஒன்றாகும்.

எனினும் அந்த வாகனங்களை ஓட்டுவதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக இந்த வாகனத்தை இந்தியாவில் பயன்படுத்த தடை செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே இந்த செயற்பாட்டிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாகவும், அதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறிப்பாணை ஒன்று ஒப்படைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.